Friday, August 27, 2010

மஹாகணபதி ஹோமம்


நீர்வேலி அருள்மிகு ஸ்ரீ அரசகேசரி விநாயகர் திருக்கோயிலில் எதிர்வரும் 28.08.2010 சனிக்கிழமை காலை 7மணி தொட்டு மஹாகணபதி ஹோம வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் விநாயகசதுர்த்திக்கு முந்தைய ‘மஹாசங்கடஹர சதுர்த்தி’ நன்நாளில் இந்த ஹோமம் வருடாந்தம் நடைபெறுவது இவ்வாலய வழக்கம். இந்த வகையில் இவ்வாண்டும் செப்டம்பர் 13ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ள வருடாந்த மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக இந்த ஹோம வைபவம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

மேலும் இவ்விழா பொது உபயமாக நடைபெறவுள்ளதால் விரும்பும் அடியவர்கள் தங்கள் காணிக்கைகளையுமு; ஆலயப் பொருளாளரிடம் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஆலய பரிபாலனசபையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எல்லா சங்கடங்களையும் நீக்கி சந்தோஷமான வாழ்வை எங்கள் அரசகேசரி ஆனைமுகக் கடவுள் தர வேண்டுவோம்.

தகவல்-
தி.மயூரகிரி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை