Saturday, November 28, 2009

வைரவிழாவும்,வெள்ளி விழாவும்

ன்று (29.11.2009) நீர்வேலி ஸ்ரீ கணேசா சன சமூகநிலைய வைரவிழாவும் ஸ்ரீ கணேசா முன்பள்ளி வெள்ளி விழாவும் அரசகேசரிப்பிள்ளையார் இணையத்தள அறிமுக விழாவும். நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலய முன்பள்ளியில் வெகுவிமரிசயாக நடைபெறஉள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.



Tuesday, November 24, 2009

இணையற்ற கணபதி இணையத்தில்

தகவல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து தனது வேலையை காட்டிக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் விஞ்ஞானத் துறை சார்ந்ததுதான் இத்தொழில் நுட்பங்கள் என்பது மாறி இலத்திரனியல் ஊடகத்தின் பிறிதொரு பரிமாணமாக பல்வேறுபட்ட வசதிகளை உள்ளடக்கியதாக இலக்கியம், ஆன்மீகம், போன்ற பலதரப்பட்ட பிரிவுகளையும் தன்னகத்தே இணைத்துப் பயணிக்க இணையமும் அதன் வடிவமைப்பாளர்களும் இறங்கி பல காலங்களாகப்போகின்றன. உலகம் என்பதும் அதன் வளர்ச்சி, அது எந்தெந்த காலத்தில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதும் அந்தப்பரம்பொருளால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டாலும் அதற்கான வேலைத்திட்டங்களிலும் முயற்சிகளிலும் மனிதம் எப்போதுமே தோற்றுவிடாது முன்னேறிக் கொண்டிருக்கிறதெனலாம்.

ஆலய உற்சவ விபரம்

மிழ் ண்டிகை நாட்ள்
  • ஜனவரி
  1. 13, 2010 மார்கழி 29, விரோதி புதன் போகிப் பண்டிகை
  2. 14, 2010 தை 1, விரோதி வியாழன் தைப்பொங்கல் , தை அமாவாசை
  3. 15, 2010 தை 2, விரோதி வெள்ளி மாட்டுப்பொங்கல்
  4. 30, 2010 தை 17, விரோதி சனி தைப்பூசம்
  • பிப்ரவரி
  1. 12, 2010 தை 30, விரோதி வெள்ளி மகா சிவராத்திரி
  2. 28, 2010 மாசி 16, விரோதி ஞாயிறு ஸ்ரீ மாசிமகம்
  • மார்ச்
  1. 16, 2010 பங்குனி 2, விரோதி செவ்வாய் தெலுங்கு வருடப்பிறப்பு
  2. 2010 பங்குனி 10, விரோதி புதன் ஸ்ரீ ராமநவமி
  3. 29, 2010 பங்குனி 15, விரோதி திங்கள் பங்குனி உத்திரம்
  • ஏப்ரல்
  1. 14, 2010 சித்திரை 1, விக்ருதி புதன் தமிழ்ப்புத்தாண்டு
  2. 25, 2010 சித்திரை 12, விக்ருதி ஞாயிறு மதுரை ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்
  • மே
  1. 4, 2010 சித்திரை 21, விக்ருதி செவ்வாய் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
  2. 16, 2010 வைகாசி 2, விக்ருதி ஞாயிறு அக்ஷய திருதியை
  3. 27, 2010 வைகாசி 13, விக்ருதி வியாழன் வைகாசி விசாகம்
  4. 28,2010 வைகாசி 14, விக்ருதி வெள்ளி அக்னி நட்சத்திரம் நிவர்த்தி
  • ஆகஸ்ட்
  1. 3, 2010 ஆடி 18, விக்ருதி செவ்வாய் ஆடிப் பெருக்கு
  2. 9, 2010 ஆடி 24, விக்ருதி திங்கள் ஆடி அமாவாசை
  3. 24, 2010 ஆவணி 8, விக்ருதி செவ்வாய் ஆவணி அவிட்டம்
  • செப்டம்பர்
  1. 1, 2010 ஆவணி 16, விக்ருதி புதன் கோகுலாஷ்டமி
  2. 11, 2010 ஆவணி 26, விக்ருதி சனி ஸ்ரீ விநாயகர் சதூர்த்தி
  • அக்டோபர்
  1. 7, 2010 புரட்டாசி 21, விக்ருதி வியாழன் மஹாளய அமாவாசை
  2. 8, 2010 புரட்டாசி 22, விக்ருதி வெள்ளி நவராத்திரி ஆரம்பம்
  3. 16, 2010 புரட்டாசி 30, விக்ருதி சனி சரஸ்வதிபூஜை , ஆயுதபூஜை
  4. 17, 2010 புரட்டாசி 31, விக்ருதி ஞாயிறு விஜயதசமி
  • நவம்பர்
  1. 5,2010 ஐப்பசி 19, விக்ருதி வெள்ளி தீபாவளி
  2. 6,2010 ஐப்பசி 20, விக்ருதி சனி கந்த சஷ்டி ஆரம்பம்
  3. 11,2010 ஐப்பசி 25, விக்ருதி வியாழன் கந்த சஷ்டி
  4. 21,2010 கார்த்திகை 5, விக்ருதி ஞாயிறு திருக்கார்த்திகை , மலைதீபம்
  •  டிசம்பர்
  1. 17, 2010 மார்கழி 2, விக்ருதி வெள்ளி ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

<>சிவராத்திரி <>
ஆலய உற்சவ விபரம்
இல
உபயம்
விலாசம்
உற்சவம்
1ஆறுமுகம் கணபதிப்பிள்ளைவிளான், நீர்வேலி வடக்கு.சித்திரை வருடப் பிறப்பு


மாதாந்த நித்திய பூசை
2பொ.கிருஷ்ணானந்தன்நீர்வேலி வடக்குதைமாதம்
3க.தேவராசாஇராசவீதி, நீர்வேலி மாசிமாதம்
4வே.ச.நல்லைநாதன்அச்செழுபங்குனி மாதம்
5வே.கணேஸ்வரன்நீர்வேலி மேற்குசித்திரைமாதம்
6கா.தர்மலிங்கம்பிள்ளையார் கோவிலடிவைகாசி மாதம்
7சிவபாக்கியம்.மார்க்கண்டுகரந்தன்,நீர்வேலிஆனிமாதம்
8த.ஞானசுந்தரம்கரந்தன், நீர்வேலிஆனிமாதம்
9பொ.கிஷ்ணகுமார்நீர்வேலி வடக்குஆவணிமாதம்
10ஆ.தற்பரானந்தம்விளான்,நீர்வேலிபுரட்டாதி மாதம்
11சு.வேலுப்பிள்ளைகரந்தன், நீர்வேலிஐப்பசி மாதம்
12வீ.நல்லைநாதன்இராசவிதிகார்த்திகைமாதம்
13கோ.தேவராசா நீர்வெலி வடக்குமார்கழிமாதம்
வருடாந்த மகோற்சவம்
14சங்கரப்பிள்ளை நடராசா குடும்பத்தினர்நீர்வேலி வடக்குகொடியேற்றம்
15சி.மாணிக்கவாசகர்நீாவேலி வடக்கு2ம் திருவிழா
16பொ.சி.மகேந்திரன்இராசவீதி நீர்வேலி3ம் திருவிழா
17மானிக்கம் நடராசாகரந்தன்வீதி நீர்வேலி4ம் திருவிழா பகல்
கணபதிப்பிள்ளை அரசகேசரிநீர்வேலி தெற்கு4ம் திருவிழா இரவு
பெ.கந்தப்பிள்ளை குடும்பம்நீர்வெலி தெற்கு4ம் திருவிழா இரவு
18க.ஆறுமுகம்நீர்வெலி தெற்கு5ம் திருவிழா பகல்
சி.லோகநாதன்நீர்வேலி மேற்கு5ம் திருவிழா பகல்
சிவசம்பு பூதத்தம்பிநீா்வேலி வடக்கு5ம் திருவிழா இரவு
19வேலுப்பிள்ளை சபாபதி குடும்பம்நீர்வேலி வடக்கு6ம் திருவிழா
20பொ.தியாகராசாநீர்வேலி மத்தி7ம் திருவிழா
21கந்தையா மகாலிங்கம்
நீர்வேலி தெற்கு

8ம் திருவிழா

வேட்டைத்திருவிழா
அப்புப்பிள்ளை சிவபாதம்

பொன்னுத்துரை கனகரத்தினம்

திரு.சிதம்பரநாதன் வல்லிபுரம் குடும்பத்தினர்

22கந்தையா சுகுமாரன்நீாவேலி வடக்கு9ம் திருவிழா  பகல்
செல்வி. புவனேஸ்வரி அம்பிகை பாகன்நீர்வேலி மத்தி9ம் திருவிழா இரவு
23கணபதிப்பிள்ளை தாமோதிரம்பிள்ளைநீர்வேலி மத்திதேர்த்திருவிழா
24சி.மணியம்கரந்தன் வீதிதோ் அன்னப்பாவாடை
செ.சிவலிங்கம்நீர்வேலி
25இ.மகாதேவன்நீர்வெலி மத்திதீர்த்தத் திருவிழா
26சி.க.கணபதிப்பிள்ளை, கந்தசாமி கிருபாகரனும் அன்பர்களும்நீர்வேலிபூங்காவனம்
சதுர்த்தி உபயம்
27வே.சின்னத்தம்பி குடும்பத்தினர்கரந்தன் வீதி, நீர்வேலிதை மாதம்
28திருமதி இராசராசேஸ்வரி அம்மா கனக சபாபதிநீர்வேலிமாசி மாதம்
29சின்னத்தம்பி விநாயக கமூர்த்திநீர்வேலி வடக்குபங்கனி மாதம்
30ஜெனகரத்தினம்அரசரத்தினம்நீர்வேலி வடக்குசித்திரை மாதம்
31சி.செல்வராசாஇராசவீதிவைகாசி மாதம்
32நா.துரைசிங்கம்நீர்வேலி தெற்குஆனி மாதம்
33வீ.பரமேஸ்வரிநீர்வேலிஆடி மாதம்
34அருனையா சுப்பிரமணியம்நீர்வேலிஆவனி மாதம்
35-----------------------------------------------------புரட்டாதி மாதம்
36க.வினாயக சுந்தரம்நீர்வேலிஐப்பசி மாதம்
37சிதம்பரப்பிள்ளை கௌரிசங்கரும்  உமாசங்கரும்நீர்வேலி மத்திகார்த்திகை மாதம்
38க.இராசதுரைநீர்வேலி மத்திமார்கழி மாதம்
நவக்கிரக அபிஷேகம் புரட்டாதிச் சனி
39ஆறுமுகம் சிவபாக்கியம்கரந்தன் சந்தி நீா்வேலி1ம் கிழமை
40இ.முருகையன்நீா்வேலி2ம் கிழமை
41ச.பூரணானந்தசிவம்நீர்வேலி3ம் கிழமை
42கா.சாம்பசதாசிவக்குருக்கள்
4ம் கிழமை
43மாணிக்கம் நடராசாகரந்தன் வீதி5ம் கிழமை
1த.சிவசுப்பிரமணியம்நீர்வேலி மத்தி
2ந.சிதம்பரப்பிள்ளைநீர்வேலி
திருக்கார்த்திகை
1நா.இராசசிங்கம் குடும்பத்தினர்கெராளிவத்தை ஒழுங்கை நீா்வேலி
திருக்கார்த்திகை தீப உற்சவம்
1க.அரசகேசரிநீர்வேலி
ஆணி உத்தரம்
1அ.பக்தவற்சலம்நீர்வேலி வடக்கு
ஆவணி மூலம்
1அ.அரசகுமார்நீர்வேலி தெற்கு
மணவாளக் கோல விழா
1க.கிருபாகரன்நீர்வேலி
பிள்ளையார் கதை உற்சவம்
1க.சு.பரமநாதன்பத்தாவத்தை, நீர்வேலி1ம் நாள்
2வ.க.செல்வநாயகம்கரந்தன் வீதி, நீர்வேலி2ம் நாள்
3ச.கணேசுஇராசவீதி, நீர்வேலி3ம் நாள்
4அ.கந்தசாமிநீர்வேலி4ம் நாள்
5பூ.கதிரேசு சுப்பிரமணியம்நீர்வேலி5ம் நாள்
6முருகேசு இரத்தினம்நீர்வேலி வடக்கு6ம் நாள்
7த.சிவசுப்பிரமணியம்நீர்வேலி மத்தி 7ம் நாள்
8சி.சிவசுப்பிரமணியம்நீர்வேலி8ம் நாள்
9க.கிருபாகரன் நீர்வேலி9ம் நாள்
10பரமநாதன் நவமணிநீர்வேலி வடக்கு10ம் நாள்
11பொ.தியாகராசாநீர்வேலி மத்தி11ம் நாள்
12வி.சிவஞானசந்தரம்நீர்வேலி வடக்கு12ம் நாள்
13ஆறுமுகம் சிவசுப்பிரமணியம்நீர்வேலி13ம் நாள்
14பூதத்தம்பி மருந்தவநாதன்இராசவீதி நீர்வேலி14ம் நாள்
15செல்வி.புவனேஸ்வரி அம்பிகைகாகன்நீர்வேலி மத்தி15ம் நாள்
16இராமலிங்கம் சௌந்தரராஜன்
நீர்வேலி வடக்கு

16ம் நாள்
இராமலிங்கம் தேவராஜா
17பூ.கதிரவேலுநீர்வேலி தெற்கு17ம் நாள்
18க.திருநாவுக்கரசுநீர்வேலி வடக்கு18ம் நாள்
19கா.சாம்பசதாசிவக் குருக்கள்நீர்வேலி19ம் நாள்
20இ.சந்திரசேகரம்
நீர்வேலி

20ம் நாள்
சி.சோதிலிங்கம்
ச.பூரணானந்தசிவம்
21நா.துரைசிங்கம்நீர்வேலி21ம் நாள்
திருவெம்பாவை உற்சவம்
1இ.தியாகராஜாநீர்வேலி மத்தி1ம் பூசை
2தம்பு நமசிவாயம் குடும்பம்அகிலேசர் வளவு, நீர்வேலி2ம் பூசை
3பொ.சி.மகேந்திரன்நீர்வேலி வடக்கு3ம் பூசை
4ம..க.நடராசாநீர்வேலி மத்தி4ம் பூசை
5இ.அ.சுப்பிரமணியம்நீர்வேலி வடக்கு5ம் பூசை
6க.கிருபாகரன்நீர்வேலி6ம் பூசை
7க.சுகுமாரன்நீர்வேலி வடக்கு7ம் பூசை
8பொன்னம்பலம் சண்முகநாதன்கொக்குவில்8ம் பூசை
9பொ.கனகரத்தினம்
நீர்வேலி தெற்கு

9ம் பூசை
க.மகாலிங்கம்
அ.சிவபாக்கியம்
10நா.சி.வைத்தியநாதன்நீர்வேலி மத்தி
10ம் பூசை
சோ.வித்துவசிங்கம்நீர்வேலி மத்தி
சோ.ஞானப்பிரகாசம்குடும்பத்தினர்மூளாய்

ஆசிச் செய்திகள்


நல்லாசிகள்
எல்லாம் வல்ல அரசகேசரிப் பிள்ளையார் துணை நிற்க. எமது மெருமான் பெயரில் இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்படுவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சரித்திரப்புகழ் பெற்ற எமது பிள்ளையாரின் பெருமை உலகம் பூராகவும் பரவும் போது எம்பெருமான் திருவருள் ஆன்ம கோடிகளுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிர்வாகக் குழுவினருக்கு எமது நல்லாசிகள் உரித்தாகட்டும். உலகம் போற்ற http://www.neervelyarasakesarippillayar.com/ இத்தளம் விளங்கட்டும். நல்வாழ்த்துக்களும் இறையருளும் பெற்று விளங்கட்டும்.
நன்றி
சிவஸ்ரீ. சா. சோமதேவக்குருக்கள்,

ஸ்ரீஅரசகேசரிப்பிள்ளையார் கோயில் (பிரதமகுரு)

நீர்வேலி
இணையம் வழியே அரசகேசரியான் புகழ் பரவட்டும்.
இன்றைய தகவற் தொழிநுட்ப உலகிற்கு ஏற்ப நமது சமய ஸ்தாபனங்களையும் வளார்த்தெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வகையில் ‘அரககேசரி‘ மாமந்திரி அவர்களால் கி.பி 16ம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட் வரலாற்று சிறப்புடைய அரசகேசரி வினாயகர் ஆலயத்திற்கு ஓர் இணையத்தளம் உருவாக்கப்படுவதை அறிந்து மகிழ்கிறோம்.

‘www.neervelyarasakesarippillayar.com‘ என்ற பெயரில் உருவெடுக்கும் இந்த இணையத்தளம் மேற்படி ஆலயம் சார்ந்த செய்திகளை உலகெங்கும் வாழும் எம் பெருமானின் அடியார்களுக்கு ஆலயச்செய்திகளை, படங்களை உடனுக்குடன் தந்து அவர்களின் பக்தி வளர உதவும் என நம்புகிறோம்.

மேற்படி இணையத்தை உருவாக்ளி நடத்த முயலும் இணையக் குழுமத்தாருக்கு நம் அன்பு ஆசீர்வாதங்களையும் வாழ்து்க்களையும் தெருவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

தொடர்ந்தும் மேற்படி இணையக்குழுமத்தார் நம்மூருக்கு, நமது அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்திற்கு மிக்க பெருமையுன்டாகும் வண்ணம் உலகளாவிய வலைப்பின்னலூடாக நற்காரியங்கள் செய்யவும் அவற்றுக்கு எவ்வித இடையூறும் இன்றி நல்லபடி முழுமை பெறவும் விநாயகப் பெருமான் பாதம் பணிந்து ஆசிகளும் வாழ்த்துக்களும் வழங்கி மகிழ்கிறோம்.

இவ்வண்ணம்

சிவஸ்ரீ கு.தியாசராசக்குருக்கள்

செல்லக்கதிர்காமகோவில்

(பிரதமகுரு)

நீர்வேலி.



இணையத்திற்கு ஆலய பரிபாலன சபைப் பொருளாளராகிய எனது ஆசியுரை
நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையாலும் வேறு காரணங்க்களாலும் எமது விநாயக அடியார்கள் கடல் கடந்து பல்வேறு நாடுகளில் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்ஙனம் அவர்கள் வேஏற்று நாடுகளுக்குச் செல்லும் போதும் அங்கு வாழ்ந்து வரும் போழுதும தமது குல தெய்வமாகிய நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையாரை தம்மனத்திரையிலிருத்தி வளிபாடு செய்து நிறைவாக வாழ்வது புலம் பெயர் நாட்டிலிருந்து இங்கு வரும் அடியார்கள் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது.

        எனவே இத்தகைய சிந்தனையோடு வாழ்பவருக்கு இணையம் வழியே எம்பெருமானின் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களின் சிறப்புக்களையும் ஆலையத்தின் புதுத் தோற்றத்தையும் உடனுக்குடன் பார்க்கக்கூடியதாக இருப்பதால் அவர்கள் தாம் நேரில் ஆலயத்திற்கு வந்து தரிசித்தது போன்று பக்தி பரவசத்தில் மூழ்கி இன்புறுவார்கள். அத்துடன் ஆலயத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்பார்கள்..

        ஆகவே மேற்படி இணையத்தை www.neervelyarasakesarippillayar.com என்ற பெயடில் இணையத்தை உருவாக்கி நடத்த முயலும் இணையக் குழுமத்தாருக்கு எஙகளுடைய ஆசீர்வாதத்தை தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற ஆனந்தமடைகிறோம்.

                                                இங்கனம்
   ச.க.முருகையன்
பொருளாளர்
நீர்வேலி அரசகேரிப் பிள்ளையார்
நீர்வேலி.





Tuesday, November 10, 2009

சில முக்கியமான கட்டுமானங்கள்

நீர்வேலி அரசகேசரி ஆலயமானது பத்தர்களின் நன்கொடைகளாலும் விடாமுயற்சியாலும் பலவிதமான கட்டுமான பணிகளை முன்னெடுத்துக்கொண்டு இருக்கிறது. இவற்றிலே சில முக்கியமான கட்டுமானங்களை குறிப்பிட முடியும்.

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?

பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.






ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி




  1. ஓம் கன்னிமூல விநாயகாய நமஹ

பிள்ளையாரின் வாகனம்

முன்னொரு காலத்தில் யானை முகம் கொண்டகயாசுரன்என்ற பலம் பொருந்திய ஓர் அசுரன் வாந்து வந்தான் எதிரிகள்ளரகிய தேவர்களை அடக்கி வெற்றிவாகை சூட வேண்டும் தனது எண்ணம் டேர சிவனை நோக்கி பல ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான் கயாசுரன் சிவன் அவண் முன் தோண்றி கோட்ட வரம் அளிப்பார்.

பெருமானே என் போன்ற கறுத்த முகம் உடைய ஒருவனால் மட்டுமே என்னை வெல்ல முடியும் மற்றவர்களை நான் வெல்லக் கடவேனாக
ஆதன் பின் கயாசுரன் தான் சென்ற இடத்திலெல்லாம் பயத்தை ஏற்படுத்தியதோடல்லாமல் அளவிடற்கரிய நாசத்தையும் விளைவித்தான். தேவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘பகவானோ காத்தருளுங்கள். கயாசுரனின் அட்டகாசங்களைத் தாங்க முடியவில்லை. பெரும் நாசத்தை விளைவிக்கிறான’;.
‘ஆவன் சிவனிடம் வரம் பெற்றுள்ளதால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் அவனைப் போல யானை முகம் கொண்ட ஒருவனால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றுள்ளதால் நீங்கள் புpள்ளையாராகிய கணேசனை அணுகிப்பாருங்கள்’.

கணேசனிடம் சென்று தேவர்கள் முறையிட்டனர். ‘கவலை கொள்ள வேண்டாம். நூன் உங்களுக்கு உதவுகிறேன்.’ யானை முககத்தேனின் தொந்தியையும்;; தொப்பையையும் பார்த்து கயாசுரன் எள்ளி நகையாடினான்.’என்ன என்னுடன் போர் புரிய வந்துள்ளாயா? ‘கயமுகனாகிய கணபதிக்கும் கயாசுரனுக்கும் மிகப்பெரிய யுத்தம் நடந்தது. தேவர்கள் பிரமித்துப் போனார்கள்.

இவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி வேறு வழியில்தான் வெற்றி கொள்ள வேண்டும்’. துன்னுடைய தந்தத்தால் கயாசுரனை கணேசன் தாக்கினான். ‘ஐய்யோ என்னுடைய பலமேல்லாம் போய் விட்டதே’ கயாசுரன் மூஞ்சூறாக மாறி ஓடினான். கணேசன் விடவில்லை மூஞ்சூறின் முதுகைபற்றினான். ’என்னை மன்னித்து விடுங்கள்’என்றான் ‘சரி மனதார தவறை உனர்ந்த உனக்கு மன்னிப்பு உண்டு. இன்று முதல் நீ என் வாகனமாக செயல்படுவாய்.

அறுகம்புல் வளிபாடு

ஒருநாள் கணேசன் கைலாயத்தில் தவம் செய்து கொண்டிருந்த போது நந்தி வந்தது தீர்க்கதரிசியே சேர்களெல்லாம் தங்களை காண வந்துள்ளார்கள்’ என்றது ‘அவர்களை வரச்செல்’ என்றார். ‘நீங்கள் எல்லாம் ஏன் வருத்தத்தோடு உள்ளீர்கள்?’ அனலாசூரன் என்னும் அரக்கன் எங்களுக்கு சொல்லொண்ணாத் துயரை அளக்கிறான்’.

தோப்புக்கரணம்.

பாலகன் கனேசனுக்கு திடீரென விஸ்னுவின் சுதர்சண சக்கரத்தின் மீது ஆசை வந்து விட்டது. கனேசன் அதை ஒரு பொம்மை என்று நினைத்து விட்டான். ஒரு சமயம் விளையாட்டாக எடுத்து அதை விழுங்கிவிட்டான் விஸ்ணுவிற்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
எப்படி கனேசனிடமிருந்து சக்கரத்தை திரும்பபெறுவது அவன் பலசாலியாயிற்றே பகவான் விஸ்ணு சிறிது நேரம் யோசித்தார். கணேசனை அதிகமாக சிரிக்க வைத்தால் வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது சக்கரம் வெளியில் வந்து விழும் விஸ்ணு தனது இரண்டு காதுகளையும் நான்கு கைகளால் பிடித்துக் கொண்டு குனிந்து நிமிர்ந்து பலமுறை தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார்
இதை பார்த்தவுடன் கனேசன் பலமாக சிரிக்க ஆரம்பித்தான் உடனே சக்கரம் வெளியில் வந்து விழுந்தது. விழுந்தவுடன் விஸ்ணு அதை எடுத்து கொண்டார்.
ஆதனால்தான் நாம் எல்லோரும் தோப்புக்கரணம் போட்டு கனேசனை வழிபடுகிறோம்.

குட்டிக்கொள்ளல்

முனிவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவர் சிவபெருமானிடம் இருந்த காவிரி நதியைக்கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரவாரய் குடகு மலையில் சிவபூசை செய்து கொண்டு இருந்தர். அப்போது இந்திரன் சீர்காழியில பூசை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது.
நாரதமுனிவர் இந்திரனைப் அகத்தியருடைய கமண்டலத்திலுள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான்.

விநாயகர் பிறந்த கதை.


உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.

Sunday, November 08, 2009

கொடைகளூடே நம் எடையை நாம் காண்போம்

நமக்கு மேலேயும் கீழேயும் என்றும் நம்மை ஆச்சரியப்படவைக்கின்றவைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. விஞ்ஞானத்தில் வளற்சியடைய முன்னரும் சரி, பின்னரும் சரி ஏதோ ஒன்று நமது கற்பனைக்கெட்டாத தூரத்தில் இருந்து நம்மை ஒருபக்கத்தில் மிரட்டிய வாறும் மறுபக்கத்தில் வியப்பினைத் தந்தவாறும் இருந்து கொண்டேயிருக்கும்.இது போக பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒன்றை சாதிக்க விளைந்தவண்ணமுள்ளன.

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்?!

பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.

Wednesday, November 04, 2009

பயண வழிகாட்டி

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து 10km தூரத்தில் அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்ஆலயத்தை சென்றடைவதற்கான வழிகள்
1. மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து ஆலயம் வரை 986 இலக்கமுடைய பேரூந்தில் பயணிக்கலாம்
2. மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து நீர்வேலிச் சந்திவரை 750,751,964 இலக்கமுடைய பேரூந்தில் பயணிக்கலாம்

View பயண வழிகாட்டி - நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப்பிள்ளையார். in a larger map

View பயண வழிகாட்டி - நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப்பிள்ளையார். in a larger map

தொடர்பு


தபால் முகவரி :-
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம்,
நீர்வேலி வடக்கு
நீர்வேலி.
இலங்கை

தொலைபேசி :- தொலைநகல் :-


0094 21 - - - - - - -
0094 21 - - - - - - -
0094 21 - - - - - - -

மின்னஞ்சல் :- neervely.arasakesarippillayar@googlemail.com

வங்கிகணக்கு இலக்கங்கள் :-

கணக்கிலக்கம்   104–1–001–2–0000397
கணக்கின்பெயர் 
ePHNtyp murNfrupg;gps;isahH Nfhtpy;
வங்கி        
kf;fs; tq;f
p> gpujhd tPjp> aho;g;ghzk;                                     :     

சூழல்

நீர்வேலி !
நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த ஊரின் எல்லைகளாக கிழக்கே கைதடியும் வடக்கே சிறுப்பிட்டியும் மேற்கே அச்செழு, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன. வாழைச்செய்கை, குடிசைக் கைத்தொழில், சவாரித்திடல், அத்தியார் இந்துக் கல்லூரி, கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றுக்குப் பிரபலமான ஊராகும்.

 யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் கோப்பாய் என்ற ஊரினை தெற்கெல்லையாகவும் ஊரெழு, உரும்பிராய், அச்செழு ஆகிய ஊர்களை மேற்கு எல்லையாகவும் சிறுப்பிட்டி என்ற ஊரினை வடக்கெல்லையாகவும் நீண்ட தரவை மற்றும் நீரேரியை கிழக்கெல்லையாகவும் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் என்றதும் பனைமரம் அதன் குறியீடாக அமைவதைப்போல நீர்வேலி என்றதும் எல்லோரது நினைவுக்கும் வருவது வாழைமரம் ஆகும்.


 

 

பெயர்க்காரணம்!
கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவினுள் நீர்வேலிக் கிராம நிர்வாகம் உள்ளடங்குகிறது. இவ்வூரின் பெயர்க்காரணமாக நீரை வேலியாக உடையதால் நீர்வேலி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது. நீர்வேலி ஊரின் கிழக்கெல்லையாக நீர்நிலை உள்ளமை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. இது தவிர 'வேலி' என்ற சொல்லிற்கு ஊர், இடம் என்ற பொருள்களும் தமிழ் அகராதியில் உண்டு. ஆகவே மன நீர்மை மிக்க மக்கள் வாழும் ஊர் என்ற பொருளிலும் இது வழங்கப்பெறக் காணலாம்.

அச்சுவேலி, கட்டைவேலி, விளைவேலி, சங்குவேலி, திருநெல்வேலி போன்ற யாழ்ப்பாணத்துக் கிரமங்களின் பெயர்களும் வேலி என்ற சொற்பதத்தைத் தம்மகத்தே உடையனவாயுள்ளமை ஈண்டு சிந்திக்கத்தக்கது. இந்த வகையில் நீர்வேலி என்ற பெயர் இக்கிராமத்திற்கு உண்டாகியிருக்கின்றமையும் கவனிக்கத்தக்கதே.

யாழ்ப்பாணத்திலிருந்து பதினைந்து கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தை இராஜவீதி மற்றும் யாழ் - பருத்தித்துறை நெடுஞ்சாலை என்பன நகரத்துடன் தொடுக்கின்றன. பெயருக்கேற்ற வகையில் நீர்வேலி தண்ணீருக்குப் பஞ்சம் இல்லாத ஊர். இதனால் நீர்ப்பஞ்சம் இல்லாத இந்த ஊரில் விளைச்சலுக்கும் குறைவில்லை. பஞ்சமில்லாத இந்த ஊரில் வாழ்வோர் கொடைச்சிறப்பு உடையவர்களாக வாழ்கின்றனர். இக்காரணத்தால் தொன்மைக்காலம் தொட்டு ஒழுக்கத்துடனும் கொடைச்சிறப்புடனும் இக்கிராம மக்கள் வாழ்ந்துள்ளனர்.

இக்கிராம மக்கள் வழங்கிய விருந்துபசாரத்தில் மகிழ்ந்த வரகவி சின்னத்தம்பிப்புலவர் 'நீர்வேலி கோப்பாய் நிறை செல்வமாகும்' என்று பாடியுள்ளார்.

இக்கிராம வளத்தைப் பாடமுனைந்த அறிஞர் கு.சிற்சபேசன்


'புன்னை மாதுளை பூங்கொதி மாபுளி
தென்னை கூவிளந் தேனுகர் வண்டினம்
துன்னு பூக வனந்தொறும் வாழையோ
அன்ன தாழையோடு அடர்ந்தது சோலையே' 


என்று வியந்து பாடுகிறார்.

நீர்வையம்பதி - நீர்வேலி என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற இந்த ஊர் வரலாற்றுச்சிறப்புமிக்கது. யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசர்களில் ஒருவனான சிங்கைப் பரராஜசேகரனின் மருமகனும் அவனது முதல் மந்திரியாகத் திகழ்ந்தவனுமாகிய தமிழில் இரகுவம்ச மகா காவியத்தை யாத்த 'அரசகேசரி' என்பவன் அமைத்ததாகக் கருதப்படும் அருள்வளர் ஸ்ரீஅரசகேசரிப் பிள்ளையார் கோயில் நீர்வேலியூரின் நடுநாயகமாக விளங்குகிறது. இது இவ்வூரின் தொன்மைச் சிறப்பைக் காட்டி நிற்கிறது. இவ்வூரினூடே பழங்கால ராஜாக்கள் பாவித்த 'இராஜவீதி' ஊடறுத்துச் செல்கின்றமையும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

இயற்கை வளங்கள் நிறைந்த இந்த ஊர் வாழைக்குப் பெயர் பெற்றது. இதனால் 'கதலிவனம்' என்கிற சிறப்பை உடையது. தவிர அறிஞர்களும் குருமார்களும் கலைஞர்களும் வேளாண்மை செய்பவர்களும் கவிஞர்களும் நிறைந்து வாழ்ந்ததாலும் வாழ்வதாலும் இவ்வூர் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது. அதிகளவில் இந்துக்கள் வாழும் இந்த ஊரில் இந்துக்கோயில்கள் அதிகளவிலும் சிறப்புற்றும் காணப்படுகின்றன.



பொருளாதாரம்!
பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றவற்றில் மக்கள் ஈடுபடுகின்றனர். 



கமமும் கைத்தொழிலும்!
நீர்வேலியின் செல்வமாக சுமார் 3900 மேற்பட்ட பரப்புடைய வயல் நிலம் இருக்கிறது. ஆனால் போரும் அது தந்த பின்னடைவுகளும் அவற்றில் முழுமையும் பயன்படுத்தப்படாமலிருக்கிறது.

ஆவணி அல்லது புரட்டாதி மாதங்களில் இங்கு நெல் விதைப்பு இடம்பெறும். அறுவடையின் பின்னர் இத்தரவை மந்தை மேய்ப்பிற்கு உரிய நிலமாகப் பேணப்படுவதையும் அவதானிக்கலாம். இக்காலப்பகுதியில் இங்குள்ள சவாரித்திடலில் 'மாட்டு வண்டில் போட்டி'களும் இடம்பெறுகின்றன. வயல் நிலத்திற்கு அடுத்த படியாக வீட்டுநிலப்பயிர்ச் செய்கையும் முக்கிய இடம்பெறுகின்றது.

நீர்வேலி வாழைச்செய்கைக்கு பெயர்பெற்ற பூமி. 12000 பரப்பு தோட்டநிலத்தில் இது செய்கை பண்ணப்படுகின்றது. தோட்டங்களில் எட்டு அடி இடைவெளியில் வாழைக்குட்டிகளை நாட்டிச் செய்கை பண்ணுவதை அவதானிக்கலாம்.

போரின் காரணமாக வெளியிடத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் வாழைக்குலைகள் உரிய விலைபோகாமல் இங்குள்ள விவசாயிகள் வேதனைப்பட்டனர். தற்போது இந்த நிலை மாற்றமுற்று வருவது மகிழ்ச்சிக்குரியது. தவிர புகையிலை, வெங்காயம் போன்றனவும் மரக்கறிச் செய்கைகளும் பரவலாக நீர்வேலியில் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.

நீர்வேலியில் விவசாயத்தைப் போலவே கைத்தொழிலும் சிறப்புற்றிருக்கின்றது. இரும்புத் தொழில்கள் மற்றும் மரவேலைகள் நீர்வேலி காமாட்சியம்பாள் கைத்தொழிற்சங்கத்தினை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

இங்கே மிதிவண்டி, மணிக்கூடு போன்றன கூட உருவாக்கப்பட்டதாகக் கூறுவர். போரின் வடுக்களை இங்கும் காணலாம். இந்துச்சிற்ப சாஸ்திர மரபுப்படி வாகனங்கள், தேர் போன்றவற்றை செய்து வரும் ஆச்சாரியார்களும் நகை வேலை செய்யும் மக்களும் நீர்வேலியின் கைத்தொழிற்துறையில் தடயம் பதித்துச் செயற்படுகின்றனர். இவற்றினைப் போலவே சுருட்டுக்கைத்தொழிலும் சிறப்புற்று விளங்குகிறது.



கல்வி!
கல்வி வளர்ச்சியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியினது பங்கு பிரதானமாகும். நீர்வேலியில் அத்தியார் இந்துக்கல்லூரி, சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை, கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம், றோ.க.த.க. பாடசாலை, இந்துத்தமிழ்க்கலவன் பாடசாலை என்ற ஐந்து பாடசாலைகள் அமைவு பெற்றுள்ளன.

1850ம் ஆண்டளவில் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரால் ஆரம்பிக்கப்பட்ட சிவப்பிரகாசவித்தியாலயம் என்ற பாடசாலை 1920களில் கிறிஸ்தவமிஷனரிமாருக்கு விற்கப்படவிருந்த சமயத்தில் அத்தியார் அருணாசலம் அதனை விலை கொடுத்து வாங்கி இன்றுள்ள அத்தியார் இந்துக்கல்லூரியை ஆங்கிலப்பாடசாலை – தமிழ்மொழிப்பாடசாலை என்ற இரு பிரிவுகளாக்கி 11-02.1929 அன்று தொட்டு திறந்து செயற்படச்செய்தார். எண்பது ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றி சிறப்புடன் மிளிர்கின்றது இக்கல்லூரி.

இதே போலவே 125 ஆண்டுகளைக் கடந்தும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை அறிவொளி பரப்பி வருகிறது.

1905ல் சுவாமி ஞானப்பிரகாசரால் ஸ்தாபிக்கப்பட்ட றோ.க.த.க பாடசாலையும் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயமும் சிறுவர்களின் அடிப்படைக்கல்வியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.

இவை போலவே கடந்த ஐம்பது வருடங்களாக நீர்வேலி தெற்கில் இந்துத்தமிழ்க்கலவன் பாடசாலை இயங்கி வருகின்றது. நீர்வேலியின் கல்விப்புலத்தில் தனியார் கல்வி நிலையங்களும் முன்பள்ளிகளும் அறநெறிப்பாடசாலைகளும் கூட தத்தம் நிலையங்களை நாடி வருவோர்க்கு அறிவொளியூட்டி வருகின்றன.


அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
  
ஆன்மிகம்!
ஊரின் நடுநாயகமாக விளங்கும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோவிலின் திருமஞ்சனக்கிணறு அற்புதமானதும் தான்தோன்றியானதும் ஆகும். இதனை ஒட்டிப் பல செவிவழிச் செய்திகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பிள்ளையார் கோயிலில் பாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சிவபெருமானுக்கும் முதன்மையான இடமுள்ளமையும் குறிக்கத்தக்கது. இந்த ஆலயத்தில் உள்ள திருத்தேர் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்தது. கலைநயம் மிக்கது. 
இத்திருக்கோவில் போலவே நீர்வேலி தெற்கில் புகழ்மிக்க கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. அழகிய இராஜகோபுரத்துடன் திகழும் இக்கோவிலிலுள்ள ஆறுமுகசுவாமி மற்றும் நடராஜர் திருவுருவங்கள் புராதன சிற்பக்கலைச் சுவைஞர்களுக்கு அரிய பொக்கிஷமாகும்.
நீர்வேலிக் கிராமத்தின் வடகிழக்கில் வாய்க்காற்தரவைப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. மக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இவ்வாலயம் ஆலய குருமார்களால் பரிபாலிக்கப்படுகின்றது. ஆலயத்திலுள்ள பழைமை வாய்ந்த ஜோடிக்குதிரை வாகனம் கண்ணையும் கருத்தையும் கவரும் எழிலுடையது.
இம்மூன்று புராதன ஆலயங்களையும் தவிர நீர்வேலி வடக்கில் செல்வக்கதிர்காம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலய கருவறை வடிவமைப்பு சிறப்பானது. குமாரபுஷ்கரணி என்ற இந்த ஆலய தீர்த்தக்கேணியின் வடிவமைப்பும் வித்தியாசமாக உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் அருகருகே காமாட்சியம்பாள் ஆலயம், ராஜராஜேஸ்வரியம்பாள் ஆலயம், காளியம்பாள் ஆலயம் என்ற மூன்று பெரிய அம்பாள் ஆலயங்கள் அமைந்துள்ளன.
தவிர வைரவர், காளி போன்ற பல்வேறு தெய்வங்கட்கும் ஊரில் பல்வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்வேலி மேற்கில் மீனாட்சியம்பாள் ஆலயமுள்ளது. ஊரினைச் சுற்றிலும் காவற்தெய்வங்களின் சிறிய பெரிய ஆலயங்கள் உள்ளன.
இந்த ஆலயங்கள் யாவற்றிலும் வருடாந்தம் பெருந்திருவிழாக்களும் தினமும் கிரமமாகப் பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவற்றினைப் போலவே நீர்வேலி வடக்கில் கத்தோலிக்க மக்களால் பரலோக மாதா தேவாலயம் ஸ்தாபிக்கப்பெற்று வழிபாடாற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தேவாலயமும் ஊரின் வளத்தில் பங்காற்றி வருகின்றது.


ஆலயச்சூழல் புகைப்படங்களைப்பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்.


குருக்கள்


நிர்வாகம்


ஆலய பரிபாலன சபையினர்
இல
பதவி
பெயர்
1
தலைவர்
க.கிருபாகரன்
2
உபதலைவர்
க.நாகலிங்கம்
3
செயலாளர்
மா.நடராசா
4
உபசெயலாளர்
க.மகாலிங்கம்
5
பொருளாளர்
சி.மகேந்திரன்
6
உபபொருளாளர்
ச.க.முருகையா
7
நிர்வாக சபை உறுப்பினர்கள்  
20 உறுப்பினர்கள்
8
உள்ளக கணக்காளர்
(நிர்வாகத்திலிருப்பவர்)
9
உள்ளக கணக்காளர்
(நிர்வாகத்திலல்லாதவர்)
10
நிர்வாக சபை உறுப்பினர்கள்
15 உறுப்பினர்கள்
11
பட்டய கணக்காளர்
———
12
காப்பாளர் (போசகர்) மூவர்
______
13
அலுவலக உதவியாளர்
———–


அரசகேசரிப் பிள்ளையார் வழிபடுநர் பொதுச்சபை
………………………………………………………………………………………………………………………………………………….
அரசகேசரிப் பிள்ளையார் வழிபடுநர் பொதுச்சபையிலே ஆலயத்தின் மகோற்ஷவ பங்காளார்கள், விசேட திருவிழா உபயகாரர் ( நவராத்திரி, திருவெம்பாவை , பிள்ளையார்கதை) , ஆலயத்தின் புரோகித குடும்பங்களின் ஆண் , பெண் வழித்தோன்றல்கள், நிரந்தர திருப்பணியாளர்கள் ஆகியோர்களே பொதுச்சபை உறுப்பினருக்குத் தகுதியுடையவர்கள் இவ்வுறுப்பினர்கள் வருடந்தோறும் பொதுச்சபையால் நிர்மாணிக்கப்பட்ட குறிப்பிட்ட தொகையை (விளைபொருள் பணம்) புதுப்பித்து நீடித்துக் கொள்ள வேண்டும். இப்பொதுச்சபையானது வருடத்தில் ஒரு முறை கூட்டப்படுகிறது. அதேவேளை 3 வருடத்திற்கு ஒருமுறை நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
ஆலய உறுப்பினர் தெரிவு
………………………………………………………………………………………………………………………………………………….
ஆலய உறுப்பினர் தெரிவு ஆலயத்தின் மகோற்ஷவ உறுப்பினர் 11 பேரும் விசேட திருவிழாக்களில் இருந்து ஒருவரும், நவராத்திரி திருவிழா இருந்து ஒருவரும். திருவெம்பாவையிலிருந்து ஒருவரும், பிள்ளையார் கதையிலிருந்து ஒருவரும், பொதுச்சபையிலிருந்து 10 பேருமாக 25 உறுப்பினர் தெரிவுசெய்யப்படுவர்.
நிர்வாக சபைத் தெரிவு
………………………………………………………………………………………………………………………………………………….
நிர்வாக சபையில் தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர், உள்ளக கணக்காளர் (நிர்வாகத்திலிருப்பவர்), உள்ளக கணக்காளர் (நிர்வாகத்திலல்லாதவர்), பட்டய கணக்காளர், காப்பாளர் (போசகர்), உதவியாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படுகின்றனர்.
காப்பாளர் : – இந்துசமய வழிபாடு , கிரிகைகள் கற்று பாண்டித்தியம் பெற்றவர், மகோற்சஷ பிரதமகுரு,
நிர்வாக உறுப்பினர்கள்
………………………………………………………………………………………………………………………………………………….


நிர்வாக உறுப்பினர்கள்
இல
பெயர்
1
பொ.தியாகராசா
2
சு.சண்முகவடிவேல்
3
அ.சுப்பிரமணியம்
4
பொ.கிருஸ்ணானந்தன்
5
க.கணபதிப்பிள்ளை
6
அ.அரசகுமார்
7
த.பாலசிங்கம்
8
ஆ.சிவபாதம்
9
சி.சோமசுந்தரம்
10
த.ஞானசுந்தரம்
11
ந.பவளகேசரி
12
வே.கனேஸ்வரன்
13
ந.சிவசீலன்
14
தா.அருந்தவநாதன்
15
பெ.நிர்க்குணானந்தன்.


வரலாறு

நீர்வேலிக் கிராமத்திதன் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு.
யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பலபாகங்களுக்கும் போக்குவரத்து செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர்.
இந்தவகையில் நல்லூரிலிருந்து இருபாலை, கோப்பாய், நீர்வேலி ,சிறுப்பிட்டி, நவக்கிரி ஆகிய கிராமங்களுக்கூடாக அச்சுவேலிக்குச் செல்லும் வீதி அமைகின்றது. இதனாலேயே இந்த வீதி “இராச வீதி” என்று அழைக்கப்படுகின்றது.
அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பாராஜசேகரனின் இளையமகனான பண்டாரம் மன்னனின் முதன் மந்திரியாக இருந்த அவரது மாமனாரான அரசகேசரி என்பவர் இந்த இராசவீதி வழியிலே ஒரு விசேடமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் ஒரு தான் தோன்றியான தீர்த்தம் இருப்பதாகவும் கனவு கண்டார்.
அடுத்த நாளே அதைப்பற்றி ஆராயும் பொருட்டு தான் கனவு கண்ட இடத்துக்கு வந்து ஆராய்ந்தபோது தான் கண்ட கனவின்படி அங்கு புனிதமான அந்த நீரூற்றைக்கண்டு வியந்து அதிசயப்பட்டார். அந்த ஊற்றிலிருந்து வெளிப்படும் தீர்த்தமானது அமிர்தம் போலவும், நல்லநீர்ப் பெருக்கோடும் இருப்பது கண்டு ஆனந்தப்பட்டார்.
இவ்வாறு தீர்த்த அமைப்புள்ள இடத்தில் ஆலயம் அமைப்பதே அரசமரபு எனக்கருத்திற்கொண்டு அப்புண்ணிய தீர்த்தத்தை திருமஞ்சனமாகக் கொண்டு ஒரு விநாயகப்பெருமானுக்குரிய ஆலயமமைத்து பிரதிஷட்டை செய்தார். அரசகேசரி என்ற மந்திரியால் 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதால் இவ்வாலயம் அரசகேசரிப் பிள்ளையார் கோவில் என வழங்கப்படலாயிற்று. இவ்வாலயம் மிகவும் புராதனமான ஓர் ஆலயம் என்பதற்கு மிகப்பழைய புராதன ஆலயங்கள் என்ற பதிவேட்டில் இவ்வாலயத்தின் பெயரும் பதிவாகியுள்ளமை ஒரு சான்றாகும்.

போர்த்துக்கீசரின் வருகையை அடுத்து அக்காலத்தில் சைவக்கோயில்கள் அழிக்கப்பட்டதும், சைவ அநுட்டானங்கள் ஒதுக்கப்பட்டதுமான ஒரு நிலை உருவானது. அந்தக்காலகட்டத்தில் இக்கோயிலும் பாதிக்கப்படலாமெனக்கருதி பயந்த ஊர்மக்கள் பிரதிஷ்டை பண்ணப்பட்ட விக்கிரகத்தை திருமஞ்சனக் கிணற்றுக்குள் மறைத்து வைத்தார்கள். பின்னர், குறித்த கிணற்றிலிருந்து விக்கிரகம் எடுக்கப்படும்போது பிள்ளையாரின் தும்பிக்கை சேதமுற்றிருந்தது எனவும் ஒரு கதை உண்டு.
தற்போது இவ்வாலயத்தில் புதிதாகத் தருவிக்கப்பட்ட விநாயகர் விக்கிரகமே பிரார்த்தனைக்கு உண்டு. புராதனம் மிக்க இவ்வாலயத்தை 1800 ஆம் ஆண்டு தொடக்கம் நீர்வேலியைச் சேர்ந்த கதிர்காமர் ஐயம்பிள்ளை என்பவர் பரிபாலித்து வந்திருக்கிறார்.


1873 கார்த்திகை 26 ஆம் திகதி பிரசித்தநொத்தாரிஸ் வே.சங்கரப்பிள்ளை முன்னிலையில் ஆலயத்தின் பரிபாலனப்பொறுப்பு சுவாமிநாதக்குருக்களின் மகன் இராமசாமிக் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1904 ஆம் ஆண்டு பங்குனி 7 ஆம் திகதி பிரசித்த நொத்தாரிஸ் சங்கரப்பிள்ளை முகதாவில் 7 பேரடங்கிய குழுவினரால் பராமரிப்புத்தத்துவம் ஒன்று எழுதப்பட்டது. 1906 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கோயிலின் பூசகர் சுவாமிநாதக் குருக்களின் மகன் இராமசுவாமிக் குருக்களுக்கு பராமரிப்புத்தத்துவம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.


1949 இல் இருந்து புதிய சகாப்தம் உருவானது 6 பேரைக்கொண்ட தர்மகர்த்தாசபை உருவாக்கப்பட்டது அதன்பின் தர்மாகர்த்தாசபை உறுப்பினர் தொகை 12 ஆக அதிகரிக்கப்பட்டது. இன்னும் காலத்துக்குக்காலம் குறிப்பிட்ட திருப் பணிகள் செய்து நிறைவேற்றப்படுவதற்கு திருப்பணிகள் செய்து நிறைவேற்றப்படுவதற்கு திருப்பணிச்சபைகளும் நிறுவப்பட்டன.
இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாகப் பிள்ளையாரும் அதற்கொப்ப சிவன்,அம்மன் மூர்த்தங்களும், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவசேனா சமேத முருகப்பெருமானும், நவக்கிரகமும் தெட்சணாமூர்த்தியும், துர்க்காதேவியும், சண்டேசுவரர் ஆலயமும் ஸ்தம்ப பிள்ளையார், சந்தான கோபாலர், நாகதம்பிரான் ஆகிய மூர்த்தங்களுக்கும் தனித்தனி சந்நிதானம் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாலயத்தின் வடக்கு தெற்கு பக்கங்களில் நந்தவனங்களும் தெற்குப்பக்கத்தில் தீர்த்தக்கேணியும் அழகிய மண்டபமும் அமைந்துள்ளமை ஆலயச்சிறப்பிற்பு மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளனவாகும்.

இந்தியாவிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பாசாரியர்களின் கைவண்ணத்தில் 27-01-1964 இல் ஆரம்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே பிள்ளையாருக்குரிய அழகிய சித்திரத்தேராகும். இன்னும் தேர்க் கொட்டகையும் அமைக்கப்பட்டதோடு முருகப்பெருமானுக்குரிய சித்திரதேர் 1992 இல் உள்ளுர் சிற்பாசாரியர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டதோடு 3 ஆவது சித்திரத்தேராக சண்டேஸ்வரப்பெருமானுக்கும் ஒரு சிறிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாலய நித்திய, நைமித்திய கைங்கரியங்களைப் பரம்பரை பரம்பரையாக சிவஸ்ரீ கார்த்திகேச சாம்பசதாசிவக் குருக்களும் அவர் புத்திரர் சோமதேவாக் குருக்களும் வேதாகம முறைப்படி செய்து வருவது சிறப்புடைத்தாகும்.
இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆவணிப்பௌர்ணமியைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு முதல் ஒன்பது நாள் மகோற்சவமும் நடைபெறுவதோடு பூங்காவன உற்சவமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவாராத்திரி திருவெம்பாவை, நவராத்திரி என்பனவும் மாதாந்த சதுர்த்தி திருவிழாக்களும், புராட்டாதிச்சனி நவக்கிரக அபிஷேகம், ஐப்பசி வெள்ளி, கார்த்திகைச் சோமவாரம், திருக்கார்த்திகை, ஆனி உத்திரம், ஆவணி மூலம் என்பனவற்றிற்கு உற்சவங்களும் பிள்ளையார் கதை, கந்தபுராண படனம், பெரியபுராணம், திருவாதவூரடிகள் புராணபடனம் என்பனவும் காலத்துக்குக்காலம் சமய பிரசங்கங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வருடந்தோறும் விநாயகர் சஷ்டிக்கு 21 நாளும் பெருங்கதைப்படிப்பும் லட்சஅர்ச்சனையும் நடைபெற்று வருகின்றது. விநாயகர் சஷ்டி இறுதிநாளில் கயமுகன் போர் நடைபெறுகின்றது.

மகுடாசூர சம்மாரத்திற்காக விநாயகப் பெருமான் மாசுவன் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் கோயிலுக்கு எழுந்தருளி வருவது கிராமத்துக்கே பெருமைதரும் ஒரு நிகழ்வாகும். மேலும், இவ்வாலயத்தில் வளர்பிறைச்சதுர்த்தி உற்சவம் மட்டுமன்றி அபரபக்க சங்கட சதுர்த்திக்கும் மாதந்தோறும் இரு சதுர்த்திவிழாக்கள் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.
இன்னும் இலங்கைக்கு வருகைதந்த தமிழக கலைஞர்கள் கே.பி.சுந்தராம்பாள் காரைக்குறிச்சி அருணாசலம், கி. வா. ஐகநாதன், குன்றக்குடி அடிகளார் போன்றோர் இக்கோயிலுக்கு வருகைதந்ததும் சிறப்பு அம்சங்களாகும். இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அரிஅரிவட்டார் என்னும் பெரியாரால் பாடப்பெற்ற வசந்தன் காப்புப்பாடலில்,
“வார்பூத்த கொங்கைமலை தங்கை தந்த
வள்ளல் வயல் நீர்வேலி வாழும் மூர்த்தி
ஆர்பூத்த சடை அரசகேசரிப் பேர்
அத்திமுகப்பிள்ளை மலரடி காப்பாமே”

என இப்பிள்ளையாரின் அருள் வேண்டிப் பாடியுள்ளமை கவனிக்கவேண்யதாகும். நாளும் விநாயகரின் பேரருளை வேண்டுவோமாக.
இவ்வாலயத்தைப் பற்றி அரசாங்கப் பதிவேட்டில் உள்ள விபரம்
ஆலயம் கட்டப்பட்ட காலம்: 1792
ஆலயப் பெயர்: அரகேசரிப்பிள்ளையார் கோயில்.
இருக்குமிடம்: நீர்வேலி தட்டுப் பகுதி (காணிப் பெயர்)
யரால் கட்டப்பட்டது: அவ்வூர் மக்களால் கட்டப்ட்டது.
இப்போ நிர்வகிப்பவர்: குமருப்பிள்ளை சுவாமிநாத விசு
விழா நடைபெறும் மாதம்,விபரம்: ஆவணி 9 நாட்கள் சுவாமியைக் காவி வீதி வலம் வருதல் ஒரு நாள் தேர்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை