Tuesday, November 10, 2009

குட்டிக்கொள்ளல்

முனிவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவர் சிவபெருமானிடம் இருந்த காவிரி நதியைக்கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரவாரய் குடகு மலையில் சிவபூசை செய்து கொண்டு இருந்தர். அப்போது இந்திரன் சீர்காழியில பூசை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது.

நாரதமுனிவர் இந்திரனைப் அகத்தியருடைய கமண்டலத்திலுள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான்.
விநாயகர் காக்கை வடிவுடன் சென்று காவிரியடங்கிய கமன்டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காகத்தை துரத்தினார். காகம் உந்திப் பறந்தது. கமன்டலம் கவிழ்ந்து. காவிரி பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியர் காகத்தின் மீது சிறிப்பாய்ந்தார். அது அந்தணச்சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டு குறுமுனி ஒடினார். புpள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்கும் ஒடினார். அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார்.
ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார். அகத்தியர் திகைத்து நடு நடுங்கினார். ஓங்காரப் பொருளே வேத வித்தகனே சிறியேன் அறியேனாகிக் குட்டுவதற்குக் கையை ஓங்கினேனே. என்னே என் சிறுமதி என்று தன் நெற்றியில் குட்டிக் கொண்டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றிக் கருணை புரிந்தார். இன்று முதல் நம் திருமுன் பயபக்தியுடன் நெற்றியில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள் என்று வரமளித்தருளினார். இதனால் விநாயகரின் திருமுன் அடியார்கள் சிரத்தில் குட்டிக் கொள்ளும் மரவு உண்டாயிற்று.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை