Wednesday, September 15, 2010

கொடி ஏற்றத்திருவிழா

அரச கேசரிப்பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இம்மாதம் 13ஆந் திகதி திரு.சோமதேவக்குருக்கள் தலைமையில் யாழ் நகரின் புகழ்பூத்த அந்தணச்சிவாச்சாரியார்கள் பிரசன்னத்தில் வேதாகம முறைப்படி மிகவும் பக்திபூர்வமாக பலநூறு அடியாரகளின் அரோகரா ஆரவாரத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து நாட்கள் மதியம் மற்றும் இரவுப் பூஜைகளிடம்பெற்று 21ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 22ஆம் திகதி பூரணை தினத்தன்று தீர்த்தத்திருவிழாவும் மாலை கொடியிறக்கத்திருவிழாவுடன் மகோற்வ்சவம் இனிதே நிறைவுறும்.

 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை