Saturday, December 12, 2009

"பிள்ளையார் கதை"

டிசம்பர் மாதம் 1-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாள், திருக்கார்த்திகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்!
இந்த நாளுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு!
விநாயகப் பெருமானுக்கான விநாயகசட்டி விரதம் அனுஷ்டிப்போர் இதற்கு அடுத்த [கார்த்திகைக் கார்த்திகை கழிந்த பின்னாளில்] நாளில் தான் காப்பு கட்டி 21 நாள் விரதமிருக்கப் பூசனை செய்யத் தொடங்குவர்.
இதனை விளக்கும் "பிள்ளையார் கதை" என்னும் நூலை இங்கு அளிக்கிறேன்




இதனை எழுதியவர் திரு.வரத பண்டிதர் என்னும் புலவர். திரு. வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் மகன். இலக்கியம், இலக்கணம், மருத்துவம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர்.
இவரது செய்யுள் நூல்கள்: சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம், அமுதாகரம், கிள்ளைவிடுதூது, பிள்ளையார் கதை.


ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட இந்நூலைப் படித்துப் பாராயணம் செய்து விரதம் அனுஷ்டிப்போர் எண்ணற்றவர்.
அனைவருக்கும் விநாயகர் அருள் கிட்ட வேண்டி இதனைத் துவங்குகின்றேன்.
நன்றி. 
VSK.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை