Tuesday, December 22, 2009

பிள்ளையார் கதை - 6

பிள்ளையார் கதை - 6

'பிள்ளையார் கதை'யைத் தொடர்ந்து, இன்னும் சில பதிகங்களைப் படித்தல் மரபு. அவை இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கணபதி எல்லாம் தருவான்!

போற்றித் திருவகவல் 

அருள்புரிந்து அருளும் அரசே போற்றி 
இருவினை துடைக்கும் இறைவா போற்றி

மறைமுனி ஒருவன் மாங்கனி கொணர்ந்து 
கறைமிடற்று இறைவன் கையில் கொடுப்ப 

வேலனும் நீயும் விரும்பி முன்னிற்ப 
ஒருநொடி அதனில் உலகெலாம் வலமாய்

வரும்அவர் தமக்கு வழங்குவோம் யாமென 
விரைவுடன் மயில்மிசை வேலோன் வருமுனர்



 அரனை வலம்வந்து அக்கனி வாங்கிய 
விரகுள விக்கின விநாயக போற்றி 

முன்னடி தெரியா முதல்வனைப் போற்றிப் 
பின்னடி தெரியாப் பெருங்கவிப் பெருமான் 

மண்மிசை வைத்துஉனை வாவியில் செல்லக் 
கண்ணிலான் இவனெனக் கரந்துஅவன் போகக்

கரைமிசை ஏறிக் காணாது இரங்கி 
உரைதடு மாறி உள்ளம் கலங்கிக் 

கூகூ கணபதி கூகூ வென்னக் 
கூகூ வென்றருள் குன்றே போற்றி 

அப்பணி சடையோன் முப்புரம் எரிக்க 
இப்புவி அதனை இரதம் ஆக்கித் 

தினகரன் மதிதேர்ச் சில் இலதாகப் 
பொருவரு மறைகளே புரவி யாகச் 

சங்கைசேர் நான்முகன் சாரதி யாகப் 
பங்கயக் கண்ணன் பகழி யாக 

மலைசிலை யாக வாசுகி நாணா 
நிலைபெற நிற்கு நெடுந்தேர் தன்னில் 

விக்கினந் தீர்க்கும் விநாயக நமவெனச் 
சிக்கென விறைவன் செப்பா தேறலின் 

தச்சுறச் சமைத்த தகைமணி நெடுந்தேர் 
அச்சறுத்து அருளும் அரசே போற்றி 

வேதப் பொருளாம் விமலா போற்றி 
பூதப்படை யுடைப் புனிதா போற்றி 

கரம்ஐந்து உடைய களிறே போற்றி 
பரமன் பயந்த பாலா போற்றி 

அகிலம் ஈன்றுஅருளும் அம்மை தனக்குத் 
திருமகன் ஆகிய செல்வா போற்றி 

அற்றவர்க்கு அருள்புரி அரசே போற்றி 
கற்றவர் மனதிற் காண்பாய் போற்றி 

பாசாங் குசங்கை பரித்தாய் போற்றி 
தேசார் மணிமுடித் தேவே போற்றி 

எழுநரகு எழுபிறப்பு அறுப்பாய் போற்றி 
எழுமையும் எமக்குஇங்கு இரங்குவாய் போற்றி 

துளைசெறி வக்கிர துண்டா போற்றி 
வளநிகர் ஒற்றை மருப்பா போற்றி 

வரமிகும் அரிதிரு மருகா போற்றி 
சுரர்தொழும் முருகன் துணைவா போற்றி

நல்லவர் புகழும் நம்பா போற்றி 
வல்லபைக் குரிய மணாளா போற்றி 

கயமுகத்து அவுணனைக் காய்ந்தாய் போற்றி 
வயமிகு மூஷிக வாகனா போற்றி 

ஓங்காரத் தனி யுருவே போற்றி 
நீங்காக் கருணை நிமலா போற்றி 

துறவர் தமக்கொரு துணைவா போற்றி
முறநிகர் தழைசெவி முதல்வா போற்றி 

துண்ட மாமதிபோல் துலங்கிய கோட்டைக்
கண்டகம் ஆகக் கைதனில் பிடித்துப் 

பண்டு பாரதப் பழங்கதை பசும்பொன் 
விண்டுவில் வரைந்த விமலா போற்றி 

போற்றி போற்றியுன் பொற்பதம் போற்றி
போற்றி போற்றியுன் பொற்பதம் போற்றி.
*************
போற்றித் திரு அகவல் முற்றிற்று.
********** 
வருக்கைக்கோவை [உயிர்,மெய் எழுத்துக்களால் ஆனது இதன் சிறப்பு!] 

ன்புடைக் கடவுளர்க்கு அதிபதி செயசெய 
பத்து அகற்றும் ஐங்கர செயசெய

ந்துச் சடைமுடி இறைவா செயசெய 
சன் பெற்ற எம்மான் செயசெய 

ன்னிய முடிக்கும் ஒருவா செயசெய 
ர்மனை சந்தி உகந்தாய் செயசெய 

ம்பெரு மானே ஏகனே செயசெய 
ழுல குந்தொழ இருப்பாய் செயசெய 

யா கணங்கட்கு ஆதீ செயசெய 
ற்றை மருப்பை உடையாய் செயசெய 

ங்கிய கரிமுகம் உற்றாய் செயசெய 
ஒளவியம் இல்லா தவனே செயசெய 

அ,கர வணிந்த ஆதீ செயசெய 
ண்மூன் றுடைய களிறே செயசெய 

ப்போல் மழுஒன்று ஏந்தீ செயசெய 
ங்கரன் தேர் அச்சு அறுத்தாய் செயசெய 

யமுடை வித்தக நம்பீ செயசெய 
இ,முடை விக்கி னேசுரா செயசெய 

இ,ங்கிய அன்பர்க்கு இனியாய் செயசெய 
த்துவம் உறைதரு சாமீ செயசெய 

ன்னெறி வித்தக நம்பீ செயசெய 
கீரதிக்கு இனிய பாலா செயசெய 

ன்றுள் ஆடி மகனே செயசெய 
இ,க்கரைக் களையும் இறைவா செயசெய 

அ,வக் கிண்கிணி அணிவாய் செயசெய 
இ,கக் கொம்புஒன்று ஏந்தீ செயசெய 

ஞ்சனைப் பழவினை மாற்றுவாய் செயசெய 
,ழகிய வேலனுக்கு அண்ணா செயசெய

இ,மத யானை முகத்தாய் செயசெய 
இ,க்கரி சாடும் இறைவா செயசெய 

அ,ந்தல் ஆடும் அரசே செயசெய 
ரம்ஐந்துடைய கணபதி செயசெய 

காமன் பகைவன் காதல செயசெய 
கிரியில் பாரதம் தீட்டினாய் செயசெய 

கீழ்மை ஒழித்துக் கிளர்வாய் செயசெய 
குண்டப் பண்டிக் குருவே செயசெய 

கூறிய மும்மதக் கோவே செயசெய 
கெண்டையங் கண்ணுமை மகனே செயசெய 

கேதாரப் ப்ரியம் ஆனாய் செயசெய 
கையில் சக்கரம் உடையாய் செயசெய 

கொவ்வைக் கனிவாய் மதலாய் செயசெய 
கோலக் குடநிகர் வயிற்றாய் செயசெய 

கௌவைப் பழவினை தீர்ப்பாய் செயசெய
**************
வருக்கைக் கோவை முற்றிற்று
*********** 
தத்துவ ஞானத் திருவகவல் [விநாயகர் அகவல் என வழங்கப்படும் இதன் விளக்கம் முன்னரே ஆத்திகம் வலைபூவில் அளிக்கப்பட்டிருக்கிறது! தேடினால் கிடைக்கும்!]

சீதக் களபச் செந்தா மரைப்பூம் 
பாதச் சிலம்பு பலவிசை பாடப் 

பொன்னரை ஞானும் பூந்துகி லாடையும் 
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் 

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமு மங்குச பாசமும் 
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் 

நான்ற வாயும் நாலிரு புயமும் 
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 

இரண்டு செவியு மிலங்கு பொன்முடியுந் 
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞான
அற்புத னீன்ற கற்பகக் களிறே 

முப்பழ நுகரும் மூஷிக வாகன 
இப்பொழுது தென்னை யாட்கொள்ள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி 
மாயாப் பிறவி மயக்க மறுத்துத் 

திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய்ப் 
பொருந்தவே வந்தென் னுளந்தனிற் புகுந்து

குருவடிவாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் 
கோடயு தத்தாற் கொடுவினை களைந்தே 

உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியிற் 
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி 

ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம் 
இன்புறு கருணையி னினிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்து 
இருவினை தன்னை யறுத்திருள் கடிந்து 

தலமொரு நான்குந் தந்தெனக் கருளி 
மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே 

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் 
ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி 

ஆறா தாரத்து அங்கிசை நிலையும் 
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடை பிங்கலையின் எழுத் தறிவித்துக் 
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி 

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி அதனில் கூடிய அசபை 
விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து 

மூலாதா ரத்தின் மூண்டெழு கனலைக் 
காலா லெழுப்புங் கருத்தறி வித்தே 

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் 
உடற் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும் 
எண்முக மாக வினிதெனக் கருளி

புரியட்ட காயம் புலப்பட வெனக்குத் 
தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக்

கருத்தினிற் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி யினிதெனக் கருளி 

என்னை யறிவித்து எனக்கருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்து 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து 

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிட மென்ன 
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில் 

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து 
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் 

சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச் 
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி 

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள்தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட 
வித்தக விநாயக! விரைகழல் சரணே. 
********** 
தத்துவ ஞானத் திருவகல் முற்றிற்று.
******** 

நூற்பயன் 

பொன்னுமிகுங் கல்விபுகும் புத்திரரோ டெப்பொருளும் 
மன்னு நவமணியும் வந்தணுகும் - உன்னி 
ஒருக்கொம்பின் யானைமுக வுத்தமனார் நோன்பின் 
றிருக்கதையைக் கேட்க சிறந்தது. (1) 

பொற்பனைக்கை முக்கட் புகர்முகத்துப் பொன்மவுலிக் 
கற்பகத்தி னோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக் 
கற்றவரு நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும் 
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு. (2) 

வெள்ளை யெருதேறும் விரிசடையோன் பெற்றெடுத்த 
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி 
நோற்றார் மிகவாழ்வர் நோலாதருகிருந்து 
கேட்டோர்க்கும் வராது கேடு. (3) 

சூலிலார் நோற்கிற் றுணைவர் தமைப்பெறுவார் 
சாலமிகும் வெங்கலியார் தாநோற்கில் - மேலைப் 
பிறப்பெல்லா நல்ல பெருஞ்செல்வ மெய்திச் 
சிறப்பிலே வாழ்வார் சிறந்து. (4)

வரத பண்டிதர் இயற்றிய "பிள்ளையார் கதை "முற்றிற்று. 
************************
[கணபதி எல்லாம் தருவான்.]

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை