Thursday, April 22, 2010

நீர்வேலிக்குப் பெருமை


இரகு வம்சத்தையும் தேடிப் பதிப்பிப்பது நீர்வேலிக்குப் பெருமை
      இரகுவம்சம் கடினமான தமிழில் ஆக்கப்பட்டது. எங்கோ ஒரு சில நூலகங்களில் இருப்பதாகத் தகவல். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ கணேசையர் 50 ஆண்டுகளுக்கு முன் பொருளோடு பதிப்பித்ததாகவும் வாசித்திருக்கிறேன். புத்தகம் கிடைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் கோயிலில் நடந்த விழாவில் ; நீர்வை முருகையன் “ அரசகேசரி இங்கிருந்து தான் இரகுவம்சம் எழுதியிருக்க வேண்டும். எனவே இது பற்றி ஆய்வு நிகழவேண்டும். இதனால் தான் செம்- பாட்டு பிள்ளையார் ( செம்மையான நல்ல பாட்டுக்கள் எழுந்த இடம்) என்று ஆகியிருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்தமையும் ஞாபகமிருக்கிறது.
இது பற்றியெல்லாம் யாரேனும் ஆராய்ந்தால் நீர்வேலிக்குப் பெருமை. கோயிலுக்குச் சிறப்பு.
       
 புத்தகம் பதிப்பிக்க நிறைய செலவும் வரலாம் என்பது வேறு.

தகவல் :-
தி.மயூரகிரி - நீர்வேலி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்திருச்சிற்றம்பலம் | காப்புரிமை