
அரசகேசரிக்கு சிலை அமைக்க முயற்சி, அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்தில்
துரித கதியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்னறன அந்தவகையில் நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் 12ம் திகதி நடைபெறுவதை ஒட்டி ஆலயத்தில் மிக மும்முரமாக திருப்பணிகள் நடைபெற்று வருவதை எல்லோரும் அறிவோம். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் புருஷோத்தமன் தலைமையிலான குழுவினர் தற்போது புதிய சிலைகளைச் செய்யும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இது குறித்து ஆலய பரிபாலனசபையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ச.க.முருகையா அவர்கள் குறிப்பிடுகையில், “அன்பர்கள் பலரின் விருப்பத்திற்கு ஏற்ப ஆலயத்தை நிறுவிய மகாமந்திரி அரசகேசரிக்கு புருஷோத்தமனால் வரும் நாட்களில் சிலை உருவாக்கப்படவுள்ளது” என்றார். இக்கோயிலின் முகப்பில் யாழ்ப்பாணத்தரசன் பரராஜசேகர சிங்கையாரியனின்...